பிரியமானவர்களே இக்கூட்டங்களில் கலந்து கொண்டு பயனடைய அன்புடன் அழைக்கிறோம் கர்த்தர் தாமே உங்களை ஆசீர்வதிப்பாராக.
Posts
Showing posts from January, 2019
SOUND OF CAUTION.
- Get link
- Other Apps
இன்றைய வசனம் . சத்தியத்தை அநியாயத்தினாலே அடக்கிவைக்கிற மனுஷருடைய எல்லாவித அவபக்திக்கும் அநியாயத்திற்கும் விரோதமாய், தேவ கோபம் வானத்திலிருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கிறது. ரோமர் 1: 18. சத்தியமாகிய தேவவார்த்தை அடக்கி வைக்கப்படலாகாது. மாறாக அது அறிவிக்கப்படவேண்டியது. இன்றைய காலங்களில் சுய பிரயோஜனத்திற்காக இருபுறமும் கருக்குள்ள பட்டயமாகிய தேவவார்த்தை மறைக்கப்பட்டு சுயங்கள் பிரசங்கிக்கப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஆசீர்வாத வார்த்தைகளை மட்டும் வழங்கிவிட்டு உபதேச வார்த்தைகளை அடக்கி வைத்துக்கொள்ளுகின்றனர். இல்லையென்றால் மக்கள் சபைக்கு வரமாட்டார்கள் என்கிற பயம். மக்கள் பரலோகத்தை சுதந்தரிக்க முடியாமல் சபைக்கு வந்து என்ன பயன். தன்னுடைய சுய பிரயோஜனத்திற்க்காக சபை நடத்தி சத்தியத்தை அநியாயமாய் அடக்கி வைக்கும் எல்லோர் மேலும் தேவ கோபம் நிச்சயமாய் வரும். வேத உபதேசம் இல்லாத சபை எண்ணெய் இல்லாத ஐந்து கன்னிகைகளுக்கு ஒப்பாகும். நான் உங்களை அறியேன் என்று கர்த்தர் சொல்லிவிடுவார். எச்சரிக்கையின் சப்தம் இது. ஆமென். கர்த்தர் தாமே உங்கள் தேவைகளை சந்தித்து உங்களை ஆசிர்வதித்து நடத்துவாராக !
WAITING FOR THE LORD
- Get link
- Other Apps
கர்த்தருக்கு ஸ்தோத்திரம். கர்த்தருக்கு காத்திருக்கிறவர்கlளோ புது பெலன் அடைந்து கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள். ஏசாயா 40:31 உங்கள் காத்திருப்பு விருதவாய் போகாதபடி கர்த்தர் உங்களை சந்திப்பார். 1. அவருடைய இரட்சிப்பிற்கு காத்திருக்க வேண்டும். ஆம் , பிரியமானவர்களே! நான்தான் இரட்சிக்கபட்டுவிட்டேனே , இன்னும் எதற்கு காத்திருக்கவேண்டும் என்று நீங்கள் கேட்கலாம் . ஒரு சத்தியத்தை அறிந்துகொள்ளவேண்டும். இரட்சிப்பு மூன்று நிலைகளை கொண்டது. அதாவது, கடந்தகால இரட்சிப்பு , நிகழ்கால இரசிப்பு , கடைசி கால இரசிப்பு ஆகும். கடந்த கால இரட்சிப்பு என்பது இயேசுவை ஏற்றுக்கொண்டவுடனே, ஞானஸ்நானம் பெற்ற உடனே நாம் பெரும் இரட்சிப்பு ஆகும். இது பொதுவான இரட்சிப்பு என்றும் சொல்லலாம். காண்க எபேசியர் 2: 5 அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மை கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார் ; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள் , மற்றும் 2:8 கிருபையினால் விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள் இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு . இலவச இரட்சிப்பு ஆகும் . இந்த நிலை இல்லாமல் இரண்டாம்